திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் ‘ஜன கண மன’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிஜோ ஜோஸ் ஆன்டனி இயக்குகிறார். இதனையடுத்து, தன்னைத்தானே பிரித்விராஜ் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். படத்தின் இயக்குநரான டிஜோ ஜோஸும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜனகனமண படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.