மாமல்லபுரம்: கொரோனா ஊரடங்கு தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கடலில் குளித்து வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புராதன சின்னங்களை கண்டு ரசித்து விட்டு கடலில் குளிப்பது வழக்கம். மேலும் மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோயில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 7 மாதங்களாக பூட்டு போட்டு பார்வையாளர்கள் கண்டு களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து கட்டணம் இல்லாத அர்ச்சுணன் தபசை கண்டு ரசித்து அவற்றின் முன் நின்று குடும்பத்தோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.