சென்னை: தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்திற்கு ஐசிஎம்ஆர் அனுமதியளித்துள்ளது. கொரோனா வைரஸ்க்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் பணிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் கண்டுபிடித்த கோவேக்சின் உள்ளிட்ட மருந்து பல்வேறு கட்ட சோதனைகளில் வெற்றி பெற்று, தற்பொழுது மனிதர்ளுக்கு செலுத்தும் பரிசோதனை நடைபெற்று வருகிறது.