திருமலை: கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் 3,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. நாளுக்குநாள் தொற்று அதிகரித்து வந்ததால், இலவச தரிசன டிக்கெட் வழங்குவது சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. பிறகு ரூ.300 விரைவு தரிசனம் உட்பட கட்டண தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்கக் கோரி திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தின் முன்பு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மற்றும் பாஜவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.