பூண்டி ஒன்றியத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் போந்தவாக்கம், ராமநாதபுரம், வெங்கடாபுரம் ஆகிய ஊராட்சிகளில் நடமாடும் ரேஷன் கடைகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பூண்டி ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணா தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க தலைவர் செஞ்சையா, ஊராட்சி மன்ற தலைவர்கள் சித்ரா பாபு, மாரியம்மாள் வடிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரசாத், கூட்டுறவு சங்க எழுத்தர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலாளர்கள் பாபு, யோகானந்தம், செல்லய்யா ஆகியோர் வரவேற்றனர். மேலும், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் நடமாடும் அரசு ரேஷன் கடைகளை திறந்து வைத்து அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது அப்பகுதி பெண்கள் எம்எல்ஏவிடம், “எங்கள் பகுதியில் குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியவை ஏற்படுத்தி தர வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.

Related Stories: