செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது பிரச்சனைகளை தீர்த்து கொள்வதற்காக, காவல்துறை சார்பில் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த குறைதீர் கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காவல் நிலையங்களில் பல நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள தங்களது பிரச்சனைகளை தீர்த்து கொள்ளும் வகையில், இந்த முகாம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில், பொதுமக்களிடமிருந்து 127 புகார் மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில், 115 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.