ரஜினி போஸ்டரால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: மகத்துவத்திற்கான நேரம், மாற்றத்திற்கான ரஜினி எனும் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் கட்சியிலும் சூப்பர் மேனாக தடம் பதித்திட வேண்டுமென அவரது ரசிகர்கள் கடந்த சில வருடங்களாக அவரை அரசியலில் இழுக்கும் முயற்சிகளில் தொடர்ந்து பல்வேறு வித்தியாசமான வசனங்களுடன் கூடிய போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் மடம் தெரு மற்றும் நகரின் ஒரு பல இடங்களில் ரஜனி புகைப்படத்துடன் ஆங்கில மொழியினில் ஒரு மகத்துவத்திற்கான நேரம் இதுவே எனவும் அதில் மாற்றத்திற்கானவர் ரஜனியே என்றும் போஸ்டர்களானது யார் எவர் எனும் எவ்வித அடையாளமுமின்றி ஒட்டப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினி அரசியலில் தடம் பதிப்பரா எனும் கேள்வியானது எழுந்துவரும் நிலையில் எவ்வித முகாந்தரமும் இல்லாமல் ஒட்டப்பட்டுள்ள இப்போஸ்டரால் அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் பெரும் குழப்ப நிலையானது உருவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: