சென்னை: விபத்தில் மாற்றுத்திறனாளியான வக்கீலுக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நன்மங்கலத்தை சேர்ந்தவர் பிரபு (35), வழக்கறிராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் ராஜிவ்காந்தி சாலை சுங்கச்சாவடி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த டிரக், கட்டுப்பாட்டை இழந்து இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமைடந்த பிரபு, 53 சதவீத மாற்றுத்திறனாளியானார்.