விபத்தில் சிக்கி மாற்றுத்திறனாளியானதால் வக்கீலுக்கு ரூ35 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விபத்தில் மாற்றுத்திறனாளியான வக்கீலுக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நன்மங்கலத்தை சேர்ந்தவர் பிரபு (35), வழக்கறிராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் ராஜிவ்காந்தி சாலை சுங்கச்சாவடி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த டிரக், கட்டுப்பாட்டை இழந்து இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமைடந்த பிரபு, 53 சதவீத மாற்றுத்திறனாளியானார்.

இந்நிலையில், தனக்கு ரூ. 35 லட்சம் இழப்பீடு வழங்க கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் பிரபு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ம.சிவசக்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டிரக்கை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே விபத்துக்கு காரணம். எனவே, மனுதாரருக்கு ரூ.35 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும், என நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: