ஐபிஎல் டி20: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி தீரில் வெற்றி

துபாய்: ஐபிஎல் தொடரின்  35-வது ஆட்டம் அபு துபாயில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களம் இறங்கியது. கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் 17 ரன்களே எடுத்ததால் போட்டி டை ஆனது. இதனால் சூப்பர் ஓவரை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்தது, வார்னர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

2-வது பந்தில் சமன் 2 ரன் அடிக்க 3-வது பந்திலும் இவர் க்ளீன் போல்டானார். இதனால் 3 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் கேப்டன் மற்றும் தினேஷ் கார்த்திக் களமிறங்கினர். இந்நிலையில் மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 4 பந்துகளில் 3 ரன்களை அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பாதைக்கு எடுத்துச் சென்றனர்.

Related Stories: