வேலூர்: வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கலெக்டர் சண்முகசுந்தரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பொதுமக்கள் கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்தனர். வேலூர் விமான நிலைய பணிகள், மாற்றுப்பாதை அமைக்கும் பணிகளை நேற்று மதியம் கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் அலுவலகம் நோக்கி காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது வேலூர் சேண்பாக்கம் அருகே சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த கார் நிலை தடுமாறி திடீரென சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.