தாம்பரம்: பெருங்களத்தூரை சேர்ந்தவர் மேரி ரோஸ்லின் (20), தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது தோழி நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த கலைவாணி (19), மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தார். இவர்கள், நேற்று முன்தினம் இரவு வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். சேலையூர் அருகே சென்றபோது, சாலை பள்ளத்தில் சிக்கி, தடுமாறி இருவரும் சாலை நடுவே விழுந்தனர்.