சென்னை: அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனா காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டு வழியாக கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் அவரது உடல் ஓட்டேரியில் உள்ள மின்மயானத்தில் நேற்று காலை கொண்டுசெல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் இந்த இறுதி ஊர்வல நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.