வத்திராயிருப்பு: புரட்டாசி அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு குவிந்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. நேற்று புரட்டாசி அமாவாசையையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், வழக்கத்திற்கு மாறாக காலை 7 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என கோயில் நிர்வாகம் சார்பில் பரிசோதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு கிருமிநாசினியை போலீசார் வழங்கினர்.