பூந்தமல்லி: சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (50) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர், அப்பகுதியில் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து திடீரென புகை வந்தது சிறிது நேரத்தில் வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.