சென்னை: பல்வேறு திட்ட பணிகளுக்காக ரூ.20 ஆயிரம் கோடி கடன் வாங்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வளப்பிரிவு மூலம் பெரிய அளவிலான திட்டப்பணிகளுக்காக மத்திய அரசின் நிதியுதவியை கேட்பது வழக்கம். ஆனால் தமிழக பொதுப்பணித்துறை அளித்த திட்டங்களுக்கு மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒப்புதல் தராமல் கைவிரித்துவிட்டது. இதனால், ரூ.20 ஆயிரம் கோடி கடன் வாங்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. குறிப்பாக காவேரி வடிநிலத்தில் பாசன கட்டமைப்புகளை ரூ.3 ஆயிரம் கோடி நிதியிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் வெள்ள தடுப்பு திட்டம் ஆசிய உட்கட்மைப்பு முதலீடு வங்கி நிதி மூலமும் மேற்கொள்ளப்படுகிறது.