ஆத்தூர்: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரை சேர்ந்தவர் மருதமுத்து (42). இவர், தனது மனைவி தெய்வானைக்கு (35) பக்கத்து வீட்டுக்காரரான மணிகண்டனுடன் (35) தகாத உறவு உள்ளதாக சந்தேகம் அடைந்தார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் மாலை அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மருதமுத்து, தெய்வானையின் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைக்க முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த தெய்வானை உயிர் தப்பிப்பதற்காக மணிகண்டன் வீட்டிற்குள் ஓடினார். இதனை கண்டு அங்கிருந்த மணிகண்டன் மனைவி திவ்யா (27) மற்றும் அவரது 3 வயது மகள் தனுஸ்ரீ ஆகியோர் அலறினர்.