வட சென்னையில் அதிகரிக்கும் போதைப்பொருள் விற்பனை: மாணவர்களை குறிவைக்கும் போதைப்பொருள் கும்பல்

சென்னை: சென்னையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். வண்ணாரப்பேட்டை மற்றும் கொருக்குப்பேட்டை பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்திய போது போதை மாத்திரை விற்பனை செய்வது தெரிய வந்தது. 65 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை திட்டமிட்டு போதை பழக்கத்திற்கு அடிமையாக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து போதை பொருள் விற்பனை கும்பலை சேர்ந்த 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப்பொருட்கள் தவிர மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளையும் போதை கும்பல் பயன்படுத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வாங்கி வரும் அந்த மாத்திரைகளை ஸ்ரெஞ்சி மூலம் நரம்புகளில் ஏற்றி போதைக்கு பயன்படுத்தியதும் தெரிய வந்தது. போதை பழக்கத்தை விரிவுப்படுத்தும் புதுவிதமான செயல் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: