சென்னை: சென்னையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். வண்ணாரப்பேட்டை மற்றும் கொருக்குப்பேட்டை பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்திய போது போதை மாத்திரை விற்பனை செய்வது தெரிய வந்தது. 65 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை திட்டமிட்டு போதை பழக்கத்திற்கு அடிமையாக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து போதை பொருள் விற்பனை கும்பலை சேர்ந்த 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.