ஸ்ரீநகர்: காஷ்மீரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டியிருந்த மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முப்தி விடுவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஆக.5 முதல் மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், இம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.