பெங்களூர்: கர்நாடகாவில் ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோருடன் உறங்கிய 4 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தவனை துப்பாக்கி சுட்டுப் பிடித்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம், ஸ்ரீராமபுராவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மனைவி மற்றும் 4 வயது மகளுடன் தகரக் கொட்டகை அமைத்து தங்கி பொம்மை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10ம் தேதி பெய்த மழையில் கொட்டகைக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதை அடுத்து, சங்கோலி ராயண்ணா ரயில்நிலையம் பின்புறமுள்ள பிளாட்பாரம் ஒன்றில் தஞ்சமடைந்து உறங்கி கொண்டிருந்தனர்.