கர்நாடகத்தில் பெற்றோருடன் உறங்கிய 4 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை: குற்றவாளி சுட்டுப் பிடிப்பு..!!

பெங்களூர்: கர்நாடகாவில் ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோருடன் உறங்கிய 4 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தவனை துப்பாக்கி சுட்டுப் பிடித்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம், ஸ்ரீராமபுராவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மனைவி மற்றும் 4 வயது மகளுடன் தகரக் கொட்டகை அமைத்து தங்கி பொம்மை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10ம் தேதி பெய்த மழையில் கொட்டகைக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதை அடுத்து, சங்கோலி ராயண்ணா ரயில்நிலையம் பின்புறமுள்ள பிளாட்பாரம் ஒன்றில் தஞ்சமடைந்து உறங்கி கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வை அடுத்து, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவனை தேடி வந்தனர்.

இந்த தேடுதல் வேட்டைக்கு பின், கடந்த திங்கட்கிழமை அதிகாலை போலீசார் கண்ணில் சிக்கிய தினேஷ், உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி செய்துள்ளான். இதனையடுத்து அவன் காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் கைது செய்தனர். மேலும், விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

Related Stories: