சென்னை: தமிழக அரசின் மாநில வணிக கல்வி பயிலகத்தின் முதல்வர் ரவீந்தரன் வெளியிட்ட அறிவிப்பு: தொழில்நுட்ப கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் சேர்க்கையில் பல பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. அதனை இரண்டாம் கட்ட மாணவ, மாணவியர்கள் சேர்க்கை மூலம் நிரப்பிக்கொள்ள சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குனரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை தரமணியில் இயங்கி வரும் மாநில வணிக கல்வி பயிலகம் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ பயில விரும்பும் மாணவ, மாணவியர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி அரசின் விதிகளுக்கு உட்பட்டு துணை கலந்தாய்வில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.