பூந்தமல்லி: படப்பிடிப்பில் ஈடுபட்ட சின்னத்திரை நடிகர்களை அடியாட்களுடன் வந்து தாக்கியதாக சூர்யாதேவி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர், நேற்று முன்தினம் இரவு வளசரவாக்கம் வீரப்பா நகரில் உள்ள ஒரு வீட்டில் சின்னத்திரை நடிகை ஷீபாவுடன் சேர்ந்து யுடியூப் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வரும் சூர்யாதேவி தனது ஆட்களுடன் உள்ளே புகுந்து, அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கிவிட்டுச் சென்று விட்டதாகவும், இதில் நாஞ்சில் விஜயன் மற்றும் உடன் இருந்த நடிகர்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.