நாகப்பட்டினம் எஸ்பி மாற்றம் உள்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு உதவி ஐஜியாக இருந்த ஓம் பிரகாஷ் மீனா, நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பியாகவும், நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பியாக இருந்த செல்வநாகரத்தினம், தமிழக காவல் துறை இயக்குனர் அலுவலக நிர்வாக பிரிவு உதவி ஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: