கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் வெட்டிவேர் சாகுபடி மிகவும் குறைந்த வருவதால், அரசு நடவடிக்கை எடுத்து மானியம் வழங்க வேண்டும் என விசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். வெட்டிவேர் எல்லா நிலங்களிலும் பயிர் செய்ய முடியாத ஒரு அபூர்வ பயிராகும். திருப்பதி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய சிவன் கோயில்களில் உள்ள திருமேனிகளை அலங்கரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வெட்டிவேர் ஆகும். இந்த பயிர் சாகுபடிக்கு எளிதில் கரையக்கூடிய மண் மட்டுமே உகந்ததாகும். மற்ற விவசாய பயிரை போல் வெட்டிவேர் இல்லை. கொள்ளிடம் பகுதியில் சந்தபடுகை, மாங்கா நாம்பட்டு, தில்லைமங்கலம், எடமணல் உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டு வந்த இந்த வெட்டிவேர் சாகுபடி இன்றைய நிலையில் மிகுந்த வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால் இன்றைய நிலையில் மற்ற கிராமங்களில் வெட்டிவேர் சாகுபடி நின்று போய்விட்ட நிலையில் தில்லைமங்கலம் கிராமத்தில் மட்டுமே இன்று அபூர்வமாக வெட்டிவேர் சாகுபடி செய்யப்படுகிறது. அதுவும் மிக மிகக் குறுகிய நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. காலப்போக்கில் இதன் சாகுபடி மிகமிகக் குறைந்து போய் விட்டது.