சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாட்டில் கொரோனா பாதிப்புகளில் மராட்டியத்திற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. அதிலும் சென்னையில் நாள்தோறும் பாதிப்புகளின் எண்ணிக்கை மற்ற நகரங்களை விட அதிக அளவில் காணப்படுகிறது. கொரோனா வைரசால் வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.