போதையில் தகராறு செய்த வாலிபரின் கைவிரல் துண்டிப்பு 2 பற்கள் உடைந்து விழுந்தன

புழல்: புழல் காவாங்கரை மகாவீர் கார்டன் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரதீப் (38). இவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில்  திருநீலகண்டன் நகரில் தனது நண்பர் முனுசாமியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கோபியுடன் (27) பிரதீப்  தகராறில் ஈடுபட்டார்.

இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த கோபி, பிரதீப்பின் வலது கை ஆள்காட்டி விரலை கடித்து துப்பினார்.  மேலும், பிரதீப்பின் முகத்தில் ஓங்கி குத்தியபோது, அவரது 2 முன்பற்கள் உடைந்து விழுந்தன. இதை பார்த்ததும் கோபி தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த பிரதீப்பை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோபியை தேடி வருகின்றனர்.

Related Stories: