காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நெஞ்சுவலி காரணமாக, தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு சென்னை மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவுக்கு நேற்று  முன்தினம் இரவு திடீரென்று நெஞ்சுலி ஏற்பட்டது.

இதை தொடர்ந்து, அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக  மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன

Related Stories: