வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான பேரறிவாளனுக்கு, அவரது உடல்நிலையை காரணம் காட்டி 90 நாட்கள் பரோல் கேட்டு அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி நேற்று சென்னை புழல் சிறையில் இருந்து, வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்ட பேரறிவாளன், அங்கிருந்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அவரை தாய் அற்புதம்மாள், ஆனந்த கண்ணீருடன் வரவேற்று அழைத்துச் சென்றார். முன்னதாக அற்புதம்மாள் நிருபர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது: என் பிள்ளையை கண்டிப்பாக விடுவிப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தார்.