ஈரோடு,: வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பதவியில் அமர்வார் என அமைச்சர் கருப்பணன் கூறினார்.ஈரோட்டில் அமைச்சர் கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தடுப்பு பணிகளில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சிறப்பான முறையில் பணியாற்றியதன் பலனாக நோய் பரவல் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது.