அதிமுக-வின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் தாம் இடம்பெறாததை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்: அமைச்சர் செங்கோட்டையன்

கோபி: அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் தாம் இடம்பெறாததை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபி அருகே கொடிவேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கர்நாடகம் மற்றும் மராட்டியத்தில் மூடப்பட்டுள்ள தமிழ்வழி பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் கட்டாய கல்வி உரிமை சட்டம் மூலமா தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Related Stories: