தமிழகத்தில் சி.ஆர்.பி.எஃப். தேர்வு மையம் அமைக்கக் கோரி உள்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்

சென்னை: தமிழகத்தில் சி.ஆர்.பி.எஃப். தேர்வு மையம் அமைக்கக் கோரி உள்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். சி.ஆர்.பி.எஃப். இயக்குனருக்கும் மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். 24 துணை மருத்துவ பணிகளுக்கான 780 பணியிடங்களை நிரப்ப டிசம்பர் 20ல் தேர்வு நடைபெறவுள்ளது. அகில இந்திய பணிகளுக்கான சி.ஆர்.பி.எஃப். தேர்வு மையங்களில் ஒன்றுகூட தமிழகத்தில் இல்லை. மொத்தமுள்ள 9 தேர்வு மையங்களில் 5 வட மாநிலங்களிலும், 2 தென் மாநிலங்களிலும் கிழக்கு, மேற்கில் தலா ஒன்றும் உள்ளன.

Related Stories: