தாம்பரம்: தாம்பரம் வட்டாட்சியர் அலுவலக நில அளவையர் பிரிவில் வட்ட துணை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சந்தோஷ். தாம்பரம் டவுன் சர்வே அலுவலகத்தில் சார்-ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முத்துக்குமார். இவர்களுடன் குறுவட்ட அளவையராக அனுராதா பணியாற்றி வருகிறார். நேற்று நில அளவை பிரிவில் சந்தோஷ் மற்றும் முத்துக்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அனுராதா அவர்களை தடுக்க முயன்றார். ஆனாலும், இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.