சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளன் 30 நாள் பரோலில் சொந்த ஊர் சென்றார்.பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தாய் அற்புதம்மாள் வழக்கு தொடுத்திருந்தார். சில நாட்களுக்கு முன் பேரறிவாளனுக்கு 30நாள் பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அதன் நீதிமன்ற நகல் நேற்று காலை புழல் தண்டனை சிறைப் பிரிவுக்கு வந்தது.