பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கத்துகுத்து விழுந்த வழக்கில் குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று சாலை மறியில் ஈடுபட்ட முயன்றதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ராகவநாயுடுகுப்பம் ஊராட்சி ஆர்.பி.கண்டிகை கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம்-புண்ணியகோடி ஆகியோர் குடும்பத்தினர் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கண்ணாயிரம், மகன் அப்பு (எ) ஓம்குமார் (25) உள்ளிட்ட 5 பேர் கூட்டளிகளுடன் புண்ணியகோடி வீட்டில் புகுந்து புண்ணியகோடி, அவரது மகன் பார்த்திபன் உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேரை கத்தியால் தாக்கியதில் படுகாயமடைந்தனர்.