வீட்டை உடைத்து நகை திருட்டு

பூந்தமல்லி: சென்னை திருவேற்காட்டை அடுத்த சுந்தரசோழபுரம், பாலகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (32),  தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கொடைக்கானல்  சென்றுவிட்டார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

அதிர்ச்சியுடன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் நகை, 3 கிலோ வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

Related Stories: