சென்னை: சென்னை, ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் இதுவரை 20 ஆயிரத்து, 635 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, 18 ஆயிரத்து 718 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், ‘பான்யான்’ மனநல தன்னார்வ காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட 7 மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.அவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர் சிகிச்சையை தொடர்ந்து ஏழு பேரும் குணமடைந்து காப்பகத்திற்கு நேற்று திரும்பினர்.