சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: அஞ்சல்துறை போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழியே தெரியாத வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழித் தேர்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விட அதிக மதிப்பெண் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டி, மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் அறிவுரையால் இம்முறைகேடுகளை தடுக்க முடியாது இவை தொடரவே செய்யும். தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை நியமிப்பது மட்டும்தான் இந்த பிரச்னைக்கு தீர்வு. சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்தும் உறுதிப்படுத்துகிறது. மொத்தத்தில் மத்தியஅரசு பணிகளில் மாநில ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயம்.