சென்னை: இந்தியா முழுவதும் சாலையோர வியாபாரிகள் ஆன்லைன் மூலம் தங்கள் உணவு பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்காக தேர்வான நகரங்களில் சென்னையும் ஒன்று. இந்த திட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: சாலையோர வியாபாரிகள் ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை ஸ்விக்கி நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.