தேனி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டிபட்டியில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 43.2 மி.மீ., மழை பதிவானது. மேகமலை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் வைகை அணைக்கு விநாடிக்கு 1,200 கனஅடி நீர்வரத்து உள்ளது. இதையடுத்து அணையின் நீர் மட்டம் 60 அடியை எட்டியது.தேனி மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆண்டிபட்டியில் 43.2 மி.மீ., (இன்று காலை 8 மணி வரை) மழை பதிவானது. தேனி அரண்மனைப்புதுாரில் 22.8 மி.மீ., கூடலுாரில் 11 மி.மீ., பெரியாறு அணையில்.6 மி.மீ.,தேக்கடியில் 2.8 மி.மீ., உத்தமபாளையத்தில் 4.3 மி.மீ., வைகை அணையில் 6.4 மி.மீ., வீரபாண்டியில் 7 மி.மீ., மழை பதிவானது. இந்த மழையால் வைகை அணைக்கு விநாடிக்கு 1,200 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.