சென்னை: தேமுதிக தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மியாட் மருத்துவமனையில் சீரான தொடர் திட்டமிட்ட சிகிச்சைக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டு உள்ளார். விஜயகாந்த் 2வது கட்ட மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.