ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் மட்டுமே சுற்றுலா தலங்கள் களை கட்டுகின்றன. மற்ற நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடுகிறது.. கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. மே மாதம் நடைபெற இருந்த ேகாடை விழாக்களும் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பி பிழைப்பு நடத்தும் சிறு வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள், வாடகை வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்பிற்குள்ளானார்கள். 5 மாதங்களுக்கு பின் கடந்த மாதம் 9ம் தேதி முதல் நீலகிரியில் பூங்காக்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது. வெளியூர் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வரலாம் என தெரிவிக்கப்பட்டது.