சென்னை: தமிழக அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் கடந்த 2019 ஜூலை 1ம் தேதி முதல் 2020 ஜூன் 30ம் தேதி வரை பொது ஏலம் நடத்தப்பட்டு, அங்கீகாரம் வழங்கப்பட்ட பலவகை உரிம இனங்களுக்கு கோவிட்-19 நோய் தொற்றின் காரணமாக பக்தர்கள் வருகைக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் ஜூன் 30ம் தேதி வரை உள்ள காலத்திற்கு கணக்கிட்டு வரும் நாட்களில் ஈடாக ஏலதாரர்களுக்கு கால நீட்டிப்பு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டன. ஏலதாரர்களின் மனு பொது ஏலம் தொகை முழுவதும் வசூல் செய்யப்பட்ட விவரம் மற்றும் தக்கார்/அறங்காவலர் தீர்மானம் ஆகியவற்றுடன் கோயில்களில் இருந்து வரப்பெறும் முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.