சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வீடுகளில் தகரம் அடிப்பதன் காரணம் என்ன? எந்த விதிமுறைகளின் அடிப்படையில் தகரம் அடிக்கப்படுகிறது? என்று அக்டோபர் 19ம் தேதி பதிலளிக்க தமிழக அரசு மற்றும் மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா அறிகுறி இல்லாதவர்களை சிகிச்சை மையத்திற்கு செல்ல கட்டாயப்படுத்தக்கூடாது என கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.