போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் ஊராட்சியில், கொரோனா தொற்றுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து பலியானதால், நாளை முதல் 10 நாட்களுக்கு கிராமத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, கிராம பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, காட்டகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சந்தூரில் மளிகை மற்றும் பலகாரக்கடை நடத்தி வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்த நாட்களில் பலியாகினர்.