கருங்குழி ஏரிக்கரையில் பூங்கா அமைப்பு: செங்கல்பட்டு கலெக்டர் திறந்து வைத்தார்

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சி பகுதியில் காந்தியின் 152 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள கருங்குழி ஏரிக்கரையில் பூங்கா அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ் கலந்துகொண்டு பூங்காவை திறந்து வைத்தார். பின்னர், ஏரிக்கரையைச் சுற்றி நடப்பட்ட மரங்கள் மற்றும் ஏரிக்கரை மீது அமைக்கப்பட்ட சாலைகளையும் பார்வையிட்டார். முன்னதாக, காந்தி பூங்காவுக்கு சென்று மரத்தை நட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த பயண வழி ஓய்வு பூங்காவை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள்  மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரித்து வழங்கிட பேரூராட்சி சார்பில் குப்பைக் கூடைகளை அவர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் லட்சுமி பிரியா, தாசில்தார் கனிமொழி, கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: