சென்னை: கொரோனா பரவலை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். மக்கள் நலப்பணியில் ஈடுபடும் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை எம்பி, எம்எல்ஏக்கள் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அண்மையில் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருடன் அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இருவரும் வீட்டிலே தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.