சென்னை,: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சிவசுப்பிரமணி தாக்கல் செய்த மனுவில், சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 1959ம் ஆண்டு ஏரி புறம்போக்கு நிலம் கல்வி பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டு, சுமார் ஒன்றேகால் ஏக்கர் பரப்பில் சிங்காரம் பிள்ளை அரசு உதவிபெறும் பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது
இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை சிங்காரம்பிள்ளை கல்வி அறக்கட்டளை நிர்வாகி ஒருவர், அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல் தனி நபர்கள் சிலருக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார்.