சென்னை: கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விஜயகாந்தும், அவரது மனைவியும் தேமுதிக பொருளாளரான பிரேமலதாவும் நேற்று மாலை வீடு திரும்பினர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 22ம் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு ேமற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைதொடர்ந்து விஜயகாந்த் அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, விஜயகாந்த் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்தை, அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா உடன் இருந்து கவனித்து வந்தார்.