சென்னையில் 5 பேருக்கு மேல் ஒன்றுகூட தடை

சென்னை: சென்னை மாநகர காவல் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னையில் நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை பொது இடங்களில் 5 பேருக்கு மேல் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி ஒன்று கூடினால் 144 தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். மேலும், தமிழ்நாடு சிட்டி போலீஸ் அக்ட் 41ன் படி பொது இடங்களில் பேரணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம், மனித சங்கிலி மற்றும் உண்ணவிரதம் போராட்டங்கள் நடத்த வரும் 16ம்தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: