தீயணைப்புதுறையில் 1,293 காலி பணியிடம்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 17ம் தேதி தமிழக சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க அக். 26 கடைசி நாள். எழுத்து தேர்வு டிசம்பர் 13ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அப்போது தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையில் தீயணைப்பாளர்கள் 458(ஆண்கள்) பணியிடங்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பணியிடங்கள் 458 இல் இருந்து கூடுதலாக 835 இடங்கள் அதிகரித்து மொத்தம் 1,293 ஆக பணியிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: