பொன்னேரி: உத்தரபிரதேச மாநிலத்தில், மின்சார துறை தனியார்மயமாக்கலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை, உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி, வடசென்னை அனல் மின்நிலையத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மின்வாரியம் தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து, அம்மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது, அகில இந்திய தொழிற்சங்க தலைவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தொழிற்சங்க தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் மின் ஊழியர்கள் முதல்கட்டமாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.